5

இந்தியாவின் தேசியப் பாடல் (National Song ) வந்தே மாதரம் (Vande Mataram) என்பதாகும்.இதனை பக்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) என்பவர் வங்காள மொழியில் எழுதினார்.இப்பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதனை இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

பக்கின் சந்திரர் என்பவர் வந்தே மாதரம் பாடலை 1876 ஆம் ஆண்டில் எழுதினார்.வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழியில் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார்.ஜாதுணாத் பட்டாச்சார்யா என்பவர் இப்பாடலுக்கு மெட்டமைத்துக் கொடுத்தார்.சந்திர சாட்டர்ஜி ஆனந்த மாதா (Anantha Matha) என்கிற நாவலை 1882 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.இந்தப் புத்தகத்தில் வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றிருந்தது.

வந்தே மாதரம்:

கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் 12 ஆவது மாநாடு 1896 ஆம் ஆண்டு நடந்தது.இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாக முதன்முதலாக வந்தே மாதரம் பாடல் இரவீந்திரநாத் தாகூர் முயற்சியால் பாடப்பட்டது.இதற்கு இரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன் என்பதே இப்பாடலின் பிரதான அர்த்தமாக இருந்தது.இது ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது.

இந்திய மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்துவதாக இப்பாடல் அமைந்தது.ஆங்கிலேய அரசு இப்பாடலை பொது இடங்களில் பாடுவதற்கு தடை விதித்தது.தடையை மீறி பாடியவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இரவீந்திரநாத் தாகூர் பல்வேறு இடங்களில் இப்பாடலை பாடினார்.மகாத்மா காந்தி எழுதும் கடிதங்களின் தலைப்பில் வந்தே மாதரம் எனக் குறிப்பிட்டார்.வந்தே மாதரம் என்பது தேச பக்தியை உருவாக்கும் மந்திரச் சொல் என்றார் அரவிந்தர்.

வந்தே மாதரம் முழுப் பாடலின் தமிழாக்கம்

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்

இன்சுவைக் கனிகள்

தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

எங்கள் தாய்

சுகமளிப்பவளே

வரமருள்பவளே

தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்

உன் திருப்பெயர் முழங்கவும்

கோடிக் கோடிக் கரங்கள்

உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

அம்மா! அப்லா #2 என்று உன்னை அழைப்பவர் எவர்?

பேராற்றல் பெற்றவள்

பேரு தருபவள்

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

அறிவு நீ

அறம் நீ

இதயம் நீ

உணர்வும் நீ

எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

தாயே வணங்குகிறோம்

ஆயுதப்படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே

செங்கமல மலர் இதழ்களில் உறையும்

செல்வத் திருமகள் நீயே

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

தாயே வணங்குகிறோம்

திருமகளே

மாசற்ற பண்புகளின் மனையகமே

ஒப்புயர்வற்ற எம் தாயகமே

இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

கருமை அழகியே

எளிமை இலங்கும் ஏந்திழையே

புன்முறுவல் பூத்தவளே

பொன்அணிகள் பூண்டவளே

பெற்று வளர்த்தவளே

பெருமைகள் அனைத்தையும் அளித்தவளே

தாயே வணங்குகிறோம்.

தேசியப் பாடல்:

வந்தே மாதரம் எழுச்சியை ஏற்படுத்தியபோதிலும் அது தாய் மண்ணின் அழகைப் போற்றிப் பாடுவதாக இருந்தாலும் பிற பத்திகள் துர்க்கையுடன் ஒப்புமைப்படுத்துவதாக கருதப்படுகிறது.இது சமய சார்பற்றதாக கருத முடியவில்லை. ஆகவே தேசியகீதமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.பாடலின் முதல் இரு பத்திகளை மட்டுமே தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்வது என தேசிய காங்கிரஸ் 1937 இல் முடிவு செய்து அறிவித்தது.

வந்தே மாதரம்!

சுஜலாம் ,சுபஹலாம் ,மலையஜ ஷிதலாம்,

ஷஷ்யஷியாமலம்,மந்தரம்!

வந்தே மாதரம்!

ஷுப்பரஜ்யோச்ன புலகிட்யமினிம்

புல்லக்குசுமித துரமதல ஷோப்கினிம்

சுகாசினிம் சுமதுர பர்ஷினிம்,

சுகதம் வரதம் மந்தரம்!

வந்தே மாதரம் ,வந்தே மாதரம்!

இதனை ஆங்கில உரைநடையில் அரவிந்தர் மொழிபெயர்த்துள்ளார்.

I bow to thee,Mother,

richly-watered,richly-fruited,

cool with the winds of the south,

dark with the crops of the harvests,

The Mother!

Her nights rejoicing in the glory of the moonlight,

her lands clothed beautifully with her trees in flowering bloom,

sweet of laughter,sweet of speech,

The Mother ,giver of boons,giver of bliss.

அரவிந்தரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பின் தமிழ் பொருள்

அம்மா நான் வணங்குகிறேன்.இனிய நீர் பெருக்கினை,இன் கனி

வளத்தினை,தனி நறுமலயத் தண்காற் சிறப்பினை,பைந்நிறப்

படினம் பரவிய வடிவினை வணங்குகிறேன்.வெண்ணிலாக் கதிர் மகிழ்விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மரன் பல செறிந்தனை,குறுநகையின் செலார் குலவிய மாண்பினை

நல்குவை இன்பம்,வரம் பல நல்குவை அம்மா வணங்குகிறேன்.

இப்பாடலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு இசை மற்றும் கவியாக்கம் நடந்துள்ளன.அமர் ஆஷா,ஆனந்த் மத் ஆகிய திரைபடங்களில் இடம் பெற்றுள்ளன.வந்தே மாதரம் என்ற பாடல் 1997 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் மாதுஜே சலம் என்ற பாடலுடன் ஒலித்தபோது இந்தியா மீண்டும் உயிர்த்தெழுந்தது.வந்தே மாதரம் தாய் மண்ணே வணக்கம் என்கிற பாடலை 1997 இல் கவிஞர் வைரமுத்து எழுதினார்.இதனை இசையமைத்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடினார்.இது இசை ஆல்பமாக வெளிவந்துள்ளது.63 ஆவது குடியரசு தினத்தின் போது புதிய இசையில் பாடப்பட்டது.பிக்ராம் கோஷ் இசையமைக்க பின்னணிப் பாடகர்கள் 21 பேர் சேர்ந்து பாடியுள்ளனர்.இது ஆறு நிமிடங்கள்வரை ஓடக்கூடிய இந்தப் பாடல் பாலிவுட்,கிளாசிக்கல்,ராக் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இசையமைக்கப்பட்டுளது.நாடு முழுவதும் குடியரசு தினத்தின்போது டி.வி சேனல்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இசைக்கப்பட்டன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book