6

இந்திய தேசிய நாட்காட்டியை சக நாட்காட்டி (SSaka Calendar) என அழைக்கின்றனர்.சக ஆண்டு 365 நாட்களைக் கொண்டது.ஆண்டிற்கு 12 மாதங்கள் உடையது.ஆண்டுகள் சக சகாப்தத்தில் எண்ணப்படுகின்றன.ஆண்டு பூஜ்ஜியம்(0) என்பதற்கு இணையான கிரெகொரியின் ஆண்டு கி.பி.78 ஆகும்.முதல் மாதம் கி.பி.78 ஆம் ஆண்டு தொடங்குவதாக எடுத்துக்கொள்வோம்.இது ஆட்சிக்கு வந்த ஆண்டுக்கு இணையான கிரெகொரியின் ஆண்டு நெட்டாண்டு(லீப் வருடம்) எனில் சக ஆண்டும் நெட்டாண்டுதான்.

சக ஆண்டு நாட்காட்டியை தேசிய நாட்காட்டியாக 1957 ஆம் ஆண்டு மார்ச் 22 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.நாட்காட்டி சீரமைப்புக் குழு (Calendar Reform Committee) 1957 ஆம் ஆண்டு இதனை பரிந்துரை செய்தது.இதன்படி தேசிய நாட்காட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சக ஆண்டு சைத்ரா (சித்திரை) மாதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கிறது. சாதாரண ஆண்டில் சைத்ரா முதல் தேதி மார்ச் 22 ஆகும்.லீப் வருடத்தில் முதல் தேதி 21 ஆகும்.தேசிய நாள்காட்டி சக ஆண்டு 1879 ஆம் ஆண்டு சைத்ரா முதல்தேதியில் துவங்கியது. லீப் வருடங்களில் சைத்ராவிற்கு 31 நாட்கள் உண்டு.அந்த ஆண்டின் முதல்தேதி மார்ச் 21 அன்று துவங்கும்.சக நாட்காட்டியை சிலர் இந்து நாட்காட்டி என்றும் அழைக்கிறார்கள்.

இந்து நாட்காட்டி:

இந்து நாட்காட்டி என்பது ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ளது.அவற்றில் ஒன்று இந்தியத் தேசிய நாட்காட்டி.ஆகவே இந்து நாட்காட்டி என்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.இந்திய நாட்காட்டியானது வானவியல் அறிஞர்களான ஆரியப்பட்டா (கி.பி.499) மற்றும் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வராகமிதர் வடிவமைத்த பஞ்சாங்கம் என்ற அடிப்படையில் இவை அமைந்துள்ளன.

லீப் வருடம்:

லீப் வருடம் அல்லது நெட்டாண்டு என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒரு முகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒரு நாளையோ , கிழமையையோ,ஒரு மாதத்தையோ கொண்ட ஆண்டாகும்.பிப்ரவரி மாதத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதிலாக 29 நாட்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு எனக் குறிப்பிடலாம். பருவங்களும், வானவியல் நிகழ்வுகளும் சரியாக ஒரே நாள் இடைவெளியில் நடைபெறுவதில்லை. எனவே சரியாக ஒரே அளவு நாட்களைக் கொண்ட நாட்காட்டி,காலப்போக்கில் அது நடக்கவேண்டிய பருவத்தில் இருந்து நகரும்.இந்த நகர்வை ஓர் ஆண்டின் ஒரு நாளையோ,கிழமையையோ,ஒரு மாதத்தில் கூடுதலாக இணைப்பதன்மூலம் இதனை சரி செய்யலாம்.லீப் வருடத்தைத் தவிர பிப்ரவரி 28 நாட்கள் கொண்ட ஆண்டு சாதாரண வருடம் என அழைக்கப்படுகிறது

கிரெகோரியின் நாட்காட்டியில் பிப்ரவரி மாதத்தில் கூடுதலான 29 ஆவது நாளை, நான்கால் வகுபடும் எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கு சேர்க்கின்றது.அது எவ்வாறு என்றால் நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடும் ஆண்டுகளுக்கு மட்டுமே என்பன லீப் வருடங்கள்.அதே சமயத்தில் 1700,1800,1900 என்பது லீப் வருடங்கள் அல்ல.இவை சாதாரண ஆண்டுகளே.

கிரெகோரியன் நாட்காட்டி:(Gregorian calendar)

கிரெகோரியன் நாட்காட்டியானது (Gregorian calendar) போதுமான அளவு துல்லியம் கொண்டுள்ளது.இது சர்வதேச அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.மற்றும் பயன்பாட்டில் இருக்கிறது.இது மேற்கத்திய நாட்காட்டி என்றும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்படுகிறது.இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கிரெகோரியன் நாட்காட்டியான இது கி.மு.45இல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் ஜீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின்(Julian Calendar) திருத்தப்பட்ட வடிவமாகும்.இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ்(Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன் வைக்கப்பட்டது.இது 24,பிப்ரவரி 1582 ஆம் ஆண்டில் அப்போதைய திருத்தந்தையான பதின்மூன்றாம் கிரகோரியன் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது.இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு”கிரெகோரியன் நாட்காட்டி” என்னும் பெயர் வழங்கலாயிற்று.

இந்த நாட்காட்டியின்படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன.மேலும் இக்காலப்பகுதி “ஆண்டவரின் ஆண்டு ” எனவும் பெயரிடப்பட்டது.இது கி.பி 6 ஆவது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ்(Dionysius Exiguus) என்னும் கிறித்துவத் துறவியால் ரோமில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.

கிரெகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நாட்காட்டியில் ஜனவரி ,பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சேர்க்கப்பட்டன. ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த்,இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரெகோரியின் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன.1582 அக்டோபர்முதல் இவை கிரெகோரியன் நாட்காட்டியை பயன்படுத்தத் தொடங்கின . இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரெகோரியின் நாட்காட்டியை அங்கீகரித்தன.ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரெகோரியன் நாட்காட்டியை கடைசியாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும்.1923 பிப்ரவரி 15-இல் தான் இந்நாடு கிரெகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

தேசிய நாட்காட்டி:

இந்தியாவின் அலுவல் முறை குடிமை நாட்காட்டியாகும்.இந்த நாட்காட்டி கிரெகோரியின் நாட்காட்டியுடன் இந்திய அரசிதழ்(Gazette of India),அனைத்திந்திய வானொலி மற்றும் அரசின் நாட்காட்டிகள்,ஆணைகளில் பயன்படுத்தப்படுகிறது.

 

எண்

மாதம்

காலம்

துவங்கும் நாள் (கிரெகோரியின்)

1

சைத்ரா

30/31

மார்ச் 22 *

2

வைசாகா

31

ஏப்ரல் 21

3

ஜ்யேஷ்டா

31

மே 22

4

ஆஷாதா

31

சூன் 22

5

சிராவணா

31

சூலை 23

6

பத்ரபாதா

31

ஆகஸ்ட் 23

7

அசுவின்

30

செப்டம்பர் 23

8

கார்த்திக்

30

அக்டோபர் 23

9

அக்ரஹாயானா

30

நவம்பர் 22

10

பௌசா

30

டிசம்பர் 22

11

மாக்

30

ஜனவரி 21

12

பல்குனா

30

பிப்ரவரி 20

 

இதில் இந்து நாட்காட்டியின் மாதங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.ஆகவே குறிப்பிட்ட நாள் மாதம் ஆகியவற்றை கிரெகோரியின் நாட்காட்டியுடன் ஒப்பிட்டு பார்க்க சிரமம் ஏற்படுவதுண்டு.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book