ஒருவன்:
சுற்றிப் பார்த்தேன் சீச்சீ இந்தச்
…. சுற்றும் உலகம் மிகவும் மோசம்,
ஒற்றுப் பிழைபோல் கண்ணை உறுத்தும்,
…. ஒற்றைப் பயலும் ஒழுங்கே இல்லை
கற்றை யாகப் பணமுள் ளோனும்
…. கஞ்சிக் கேது வழியென் பானும்
சற்றும் கவலை இன்றிப் பிழைகள்
…. சங்க டமின்றிச் செய்கின் றானே!
இன்னொருவன்:
உலகம் என்று சொன்னால் அதிலே
…. உண்மை நண்பா, நீயும் உண்டு!
வலமும் இடமும் பார்த்தாய், உன்றன்
…. வட்டத் துள்ளும் கொஞ்சம் பாரு,
புலம்பா மல்நீ முதலில் திருந்து,
…. புரட்டிப் போடு உன்றன் வாழ்வை,
சிலபேர் மாற்றம் மெதுவாய் வளர்ந்து
…. சீராய் ஆகும் எல்லாம் நாளை!
***