வந்தது கன்னடப் புதுவருஷம்,
….வாட்டமும் ஓடுது பலகாதம்,
சுந்தரத் தெலுங்கிலும் இதுவேதான்
….சித்திரை போலொரு கொண்டாட்டம்,
பந்தலில் மாவிலைத் தோரணமாம்
….பொலிவுடன் மின்னுது இல்லெல்லாம்,
இந்திர லோகமும் இங்கேதான்
….இறங்கிடக் கண்டது போல்மயக்கம்!
சந்தனம் பூசிய தட்டினிலே
….சிற்சில வேப்பிலை, ஒருவெல்லம்
தந்திடு வார்அதன் பின்னாலோர்
….தத்துவம் உண்டதை அறிந்திடணும்,
இந்தஉ லகினில் எப்போதும்
….இனிப்புடன் கசப்புமே கலந்துவரும்,
மந்தமும் துயரமும் மாறிவிடும்,
….மறுபடி நிச்சயம் நிலவுவரும்!
***