சின்னஞ் சிறிய ரோஜாப்பூ,
….சிரித்த தெங்கள் தோட்டத்தில்,
பென்னம் பெரிய முள்ளிருந்தும்
….பிசிறில் லைஅப் புன்னகையில்,
மின்னல் இழையைப் பிரித்தெடுத்து
….மேகப் பஞ்சை மேல்போர்த்தி
சன்னத் திரைபோல் இதழ்களையே
….சரியாய்க் கோத்துக் கட்டியதார்?
சிட்டுக் குருவி போலெங்கும்
….சிலிர்த்துப் பாயும் இதன்வாசம்,
பட்டைப் போலே மென்தேகம்,
….பார்க்கப் பார்க்க ஆனந்தம்!
தொட்டிப் பூவைக் கண்டாலே
….தோன்றும் இன்பம் ஏராளம்,
மட்டில் லாத கானகத்துள்
….மணக்கும் பூக்கள் எத்தனையோ!
***