சிறுவன்:
ஆழக் கடலு தாண்டிப் போன
….ஆஞ்ச நேய சாமியே,
கீழ குனிஞ்சு பார்த்து (உ)னக்குக்
….கிலிபி டிக்க வில்லையா?
தாழப் பறந்து போகும் போது
….தாவி மீனு கடிச்சுதா?
கூழக் குடிக்கச் சொல்லி வயிறு
….கூச்சல் போட்டுத் துடிச்சுதா?
அனுமன்:
ராம சாமி பேரச் சொல்லி
….ராகம் பாடிப் பறந்ததால்,
தீம என்ன நெருங்க வில்ல
….தீவு கொண்ட கடலிலே!
சீம போயி தேவி அந்தச்
….சீத காலில் வுழுந்தபின்
சேம மாக ஏழு கடலச்
….சேர்த்துத் தாண்டக் கூடுமே!