என்னைச் சுற்றி நால்திசையாம்,
….எல்லாத் திசையும் நல்திசையாம்
என்ன என்ன அற்புதங்கள்
….எண்ணத் தீரா இன்வளங்கள்!
சூரியன் உதிக்கும் திசைகிழக்கு,
….சுந்தர ஒளிதரும் உலகிற்கு,
வீரியம் குறைந்து மாலையிலே
….விழுகிற திசைதான் அம்மேற்கு
உதிக்கிற சூரியன் பார்த்துநில்லு
….உன்றன் கைகள் விரித்துநில்லு
அதிசயம், வலக்கை தென்திசையாம்
….அடடா, இடக்கை வடதிசையாம்!
நான்கு திசைகள் போதாது,
….நடுவில் இன்னும் நான்குண்டு,
தேன்கொ ழிக்கும் இவ்வுலகில்
….திசைகள் எங்கும் நலமுண்டு!
***