கொம்பு மொளச்ச யானையொண்ணு
….கொத்துப ரோட்டா கேட்டுச்சாம்,
வம்பு பண்ணி ஊருக்குள்ள
….வாலை யாட்டித் திரிஞ்சிச்சாம்!
ஒட்ட கந்தான் ஓரமாக
….ஓட்ட லொண்ணு நடத்திச்சாம்,
எட்டு ரூபா காசுவாங்கி
….இட்லி தோச வித்துச்சாம்!
பக்கம் வந்து யானைநின்னு
….பரோட்டா தான்னு கேட்டுச்சாம்,
சுக்கு சேர்த்து ஒட்டகமும்
….சூடாக் கொத்தித் தந்துச்சாம்!
ஆவ லாகத் தின்னயானை
….’அச்சோ காரம்’ என்றுச்சாம்,
கூவ லோடு காட்டைநோக்கிக்
….கும்பிடு போட்டு ஓடிச்சாம்!