அறுந்த வாலு அமுதா,
….ஆனை கேட்டு அழுதா,
பொறுமை யின்றி விழுந்து எழுந்து
….புலம்பி நிலத்தை உழுதா!
அழுத பிள்ளைக் காக,
….ஆனை ஒண்ணு வாங்க
கழுகு மலைக்கு நடக்கும் ஐயா,
….காலு நோவு தாங்க?
பிள்ளை முகத்தில் சிரிப்பு,
….பிறக்க வேணும் அதுக்கு
துள்ள லாக நூறு மலையும்
….தூக்கி வருவேன் தினமும்!
நன்றி அப்பா உனக்கு,
….நாணி நின்றேன் இதற்கு,
என்னை விரும்பும் உன்னை விடவும்
….ஏது வேறு செல்வம்?